இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசின் திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது…! எச்.ராஜா அதிரடி….!

கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது.

சென்னை மயிலாப்பூரில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் எச்.ராஜா மற்றும் தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய எச்.ராஜா அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்ம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்தனர். இவர்கள் எல்லாரும் கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகள். இந்த பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.