வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி.. தோற்றாலும் மக்களின் தோல்வி! – ரஜினிகாந்த்

வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி.. தோற்றாலும் மக்களின் தோல்வி! – ரஜினிகாந்த்

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என கூறினார்.

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனையடுத்து சென்னை, போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம், தமிழக மக்களின் பிரார்த்தனைகள் தான் என கூறினார்.

மேலும் பேசிய அவர், கொடுத்த வாக்கை என்றும் தவற மாட்டேன் என்றும், மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதிட்டமிட்டிருந்தாக கூறிய ரஜினி, கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என்றும், வெளியே சென்று மக்களை சந்தித்து உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் என உரையாற்றினார்.

அதுமட்டுமின்றி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன் எனவும், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என்றும், அரசியல் மாற்றம் தேவை. அது கட்டாயம் நிகழும் என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube