முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு.!இன்று முதல் அறிமுகம்..!

மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை இன்று  முதல்  புதிய முறை அறிமுகமாகிறது என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அதேபோல் தமிழக  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டதில், மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படும் .இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில்  இன்று (டிசம்பர் 10 ஆம் தேதி)முதல்  புதிய முறை அறிமுகமாகிறது என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment