ஐ.சி.சி. விதியை விளாசிய அமிதாப் பச்சன்!

ஐ.சி.சி. விதியை விளாசிய அமிதாப் பச்சன்!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி ஆட்டம் சமன் ஆனது. அதன் பிறகு கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமன் ஆனது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி-ன் இந்த விதிமுறைக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் வித்தியாசமான முறையில் விமர்சித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்வீட்டர் பக்கத்தில், ” உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம், நான்கு 500 ரூபாய் நோட்டுக்களாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் வைத்துள்ளவரே பணக்காரர்” என்று ஐ.சி.சி கூறுவது போல் விமர்சித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube