ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை… எந்தெந்த நகரங்களில் போட்டிகள், விவரம் நாளை வெளியாகிறது.!

இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இடங்களை நாளை பிசிசிஐ வெளியிடும் என தகவல்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்திவருகிறது. கடந்த முறை 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஆண்டு இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டிக்கான இடங்களை நாளை ஐபிஎல் பைனலின் போது பிசிசிஐ வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Muthu Kumar