தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் – ஐ.ஏ.எஸ். அதிகாரி.!

தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் – ஐ.ஏ.எஸ். அதிகாரி.!

  • தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோர், இளைஞர்களை நிலைகுலைய செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட சகாயம், அதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நேர்மையான திறனுள்ள அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் சகாயம் தெரிவித்தார். மேலும் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube