நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த 2 வீரர்களை தேர்வு செய்வேன்.! ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓய்வுபெற்ற சச்சின் மற்றும் ஷான் பொலொக் ஆகிய இரண்டுபேரையும் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார், அவர் அடித்த இரட்டை சதத்தின் சாதனையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம், மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்களை வைத்து அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலே இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் தனது சமூக வலைதளபக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்பொழுது ஒரு ரசிகர் உங்களிற்கு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு ரோஹித் சர்மா சச்சின் மற்றும் ஷான் பொலொக் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுப்பேன் என்று கூறிஉள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.