ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன்-கமல்ஹாசன் ஆவேச பேச்சு ..!

ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன்-கமல்ஹாசன் ஆவேச பேச்சு ..!

சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன் என கமல் கூறினார்.

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. அவர்களுக்கு பயமில்லை அவரை தப்பு பண்றாரு நம்ம கொஞ்சம் தப்பு பண்ணா என்ன கண்டுக்கவா போறாங்க,  தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். வெறும் ஊழல் பற்றி மட்டும் நான் பேசுவதில்லை. அற்புதமான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தேடி வைச்சிருக்கு.

சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன். அது எப்படி அப்படினு  இருக்கிறீர்கள் நீங்கள் என்று கேட்டால்.. எங்கள், அப்பா எங்களை அப்படித்தான் வளர்த்துள்ளார் என கூறினார்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube