கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன் – பிரியா மணி..!!

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியா மணி கூறியது. ” இது முதலில் எனது கணவரிடம் கேளுங்கள் அவர் சம்மதித்தால் நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

priya mani

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.