கோலியைப் போல் ஆடவேண்டும்: இங்கிலாந்து வீரர் விருப்பம்!!

கோலியைப் போல் ஆடவேண்டும்: இங்கிலாந்து வீரர் விருப்பம்!!

  • தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மனநிலையை பின்பற்ற விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த உயர்வாக இடத்தில் அப்படியே இருக்க முடியாது?.

விராட் கோலியைப் போன்று ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று சில வீரர்கள் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி அதுபற்றி சிந்திப்பதில்லை. அது சரியானதே. நான் சில புள்ளியில் உயர்ந்த இடத்தில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலையுடன்தான், களத்தில் இறங்கி பந்தை விளாச இருக்கிறேன்’’ என்றார்.

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *