நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேற விரும்பினேன் – 2019 யுஎஸ் ஓபன் சாம்பியன் பியான்கா!

இந்தியன் வேல்ஸ், கனடியன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்ற திறமையான டென்னிஸ் வீராங்கனை தான் இருபத்தி ஒரு வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்கு.

இவர் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன்.  உண்மையை பேசுகிறேன்.

சொல்லப்போனால் நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு ஒரு காலத்தில் வெளியேற விரும்பினேன் என தெரிவித்துள்ளார். ஆனால், தற்பொழுது இதை பாக்கியமாக கருதுகிறேன். அது மிக மோசமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal