” என் உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டும் ” ராஜீவ் கொலையாளி முருகன் கோரிக்கை…!!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகன் எங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.வேலூர் மத்திய சிறையில் கடந்த 2-ந்தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தான் உண்ணாவிரதத்தின் போது தான் இறந்து போனால் உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்க முதலமைச்சர் ஆவணம் செய்யுமாறு  தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment