ராகுல் காந்தி கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்

காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ராகுல் காந்தி குணமடைய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது  ‘காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். தேசத்துக்காக தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.