எம்.ஜி.ஆர் பற்றி அவரது தம்பியாகிய நான் பேசுவேன்…! இரட்டை இலை இரண்டு பேர் விருந்து சாப்பிடும் இலை இல்லை…! – கமலஹாசன்

எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் படத்தையே நான் சொல்லி தான் அவங்க மேடையிலேயே பெருசா போட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆ-ரை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். அவர் இருந்து மக்களுக்காக நல்லது செய்த தலைவன். அதை எந்த கட்சிக்காரன் வேண்டுமானாலும் பேசலாம். அதுவும், அவர் தம்பி நான் பேசுவேன்.  அவர் போல் இருக்க வேண்டும் என நான் நினைப்பேன். பாதி பேர் இங்கு இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரை பார்த்தது கூட கிடையாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.