8 போலீசாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே நேற்று என்கவுன்டர் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.
விபத்தில் காயமடைந்த போலீஸ்காரரின் ஒருவரிடமிருந்து விகாஸ் துபே கைத்துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால், போலீசார் நடத்திய என்கவுன்டரில் விகாஸ் துபே உயிழந்தார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், விகாஸ் துபே தாய் சரளா துபேவை (Sarla Dubey) கான்பூர் செல்லுமாறு காவல்துறை கேட்டபோது , அவர், நான் கான்பூருக்கு செல்ல விரும்பவில்லை “விகாஸ்-க்கும் எனக்கு எந்த உறவும் இல்லை” என கூறினார்.
இதற்கு முன் கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தால், காவல்துறை அவனை என்கவுண்டர் செய்யட்டும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…