வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை-டி.ஆர்.பாலு

மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்போழுது அவர் பேசுகையில்,வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர். பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று  டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டினார் வாஜ்பாய்.பெட்ரோல் – டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.