நயன்தாராவிற்கு முன் பல பேரை காதிலித்து இருக்கிறேன் -நடிகர் சிம்பு .!

நயன்தாரா-சிம்பு இடையேயான காதல் விவகாரம் குறித்து பேசிய சிம்பு நயன்தாரா மட்டுமில்லாமல் அதற்கு முன்னரே பல பேரை காதலித்துள்ளதாக கூறியுள்ளார்.

சினிமாவில் பல பேர் காதலிப்பதும், அதன் பேர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் சகஜம் தான் . அந்த வகையில் வல்லவன் என்ற படத்தின் மூலம் காதலில் விழுந்த நயன்தாரா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் .

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுடனான காதலையும் , பிரிந்ததையும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் நானும் ,நயன்தாராவும் காதலித்தது உண்மை தான் . ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பிரிந்து விட்டோம் . ஆனால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் . நான் நயன்தாரைவை மட்டும் காதலிக்கவில்லை . அதன் முன்னரே பல பேரை காதலித்து உள்ளேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் .

நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் பிரிந்த பின்னர் “இது நம்ம ஆளு”படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.