எனக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது – நடிகை அனுசியா பரத்வாஜ்!

தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் அவர்கள் கூறியுள்ளார்.

தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகையாகவும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்யா பரத்வாஜ். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதைவிட தொகுப்பாளினியாக பலருக்கு பரீட்ச்சயமானவர். இந்நிலையில் தற்போதும் இவர் புஷ்பா, ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் கொரோன தொற்றுக்கான அறிகுறி இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal