காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் – எம்எல்ஏ ரூபி மனோகரன்

ராகுல் காந்தி வாக்கு பலித்த மாதிரி முதல் மு.க.ஸ்டாலின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்த அகில இந்திய காங்., தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,  காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன். உயிருள்ள வரை கட்சியில் இருப்பேன்.கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சி எனக்கு கொடுத்த கொடை. என் வாழ்க்கையை காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒப்படைப்பேன். ராகுல் காந்தியின் நடைபயணம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. ராகுல் காந்தி வாக்கு பலித்த மாதிரி முதல் மு.க.ஸ்டாலின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment