இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த தொகுதியை சுமக்கிறேன் – அமைச்சர் விஜயபாஸ்கர்

இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ‘எனக்கும் சுகர் இருக்கு, எனக்கும் பிபி இருக்கு, எனக்கும் தலைச்சுற்று வருது, எனக்கும் மயக்கமா வருது, எனக்கும் உடம்புல கோளாறு இருக்கு. ஆனா, மனசுக்குள்ள ஒரு வெறி இருக்கு, எடுத்துக்கொண்ட  பொறுப்பில் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும். இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கிறேன் என உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.