என்னால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது! அசுரன் பட நடிகை அதிரடி!

  • ஜெ என் யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மஞ்சு வாரியார்.
  • ஜெ என் யூ மாணவர்கள் மீது ஏபிவிபி கும்பல் நடத்திய வன்முறையை கண்டு வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது.

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான மலையாள நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரன் படத்தில், தனுசுடன் இணைந்து நடித்துள்ளார். இதுவே அவர் முதல் முறையாக நடிக்கும் தமிழ் திரைப்படம் ஆகும்.

இந்நிலையில், இவர் ஜெ என் யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெ என் யூ மாணவர்கள் மீது ஏபிவிபி கும்பல் நடத்திய வன்முறையை கண்டு வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் கொலை வெறி தாயாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. மாணவர்களுக்கு நாம் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.