‘எனக்கு காது கேட்காது’- திருமணம் செய்ய மறுத்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருமணம்  வேண்டாம் என கூறிய பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த பெற்றோரால், தற்கொலை செய்துகொண்ட பெண். 

தூத்துக்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்பவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுடலையாண்டி இளையமகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டி அவரது மனைவி இருவரும் அவர்களது டீக்கடைக்கு சென்று விட்டனர்.

இதனை அடுத்து, சுடலையாண்டி மூத்த மகள் எழுந்து சமையலறைக்கு வந்துள்ளார். அப்போது அவரது தங்கையான விஜயலட்சுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறல் சத்தம் போட்டுள்ளார்.  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம், தனக்கு காது சரிவரக் கேட்காது. இந்த பிரச்சினை இருப்பதால், எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும், இதனால் விஜயலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.