ம்ம்-னு சொல்லுங்க.. இந்தியாவிற்காக விளையாட நான் வாரேன்- ஹர்பஜன் சிங்க்!

இந்திய கிரிக்கெட் அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட தயாராக உள்ளதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்டுகளை போட்டு அசத்தி வருகிறார்.

அன்மையில் ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், மேலும், இணையத் தொடரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியப்படுத்திய தமிழக மக்களுக்கு செஞ்சார்ந்த நன்றியையும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கிய பொது, ஐபிஎல் தொடர்களில் விளையாண்டு வந்தார். தற்பொழுது இவர், இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “நான் மீண்டும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளேன்” என பெட்டியில் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.