“உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” கபில்தேவ்..!

உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார்.  கடைசியாக கடந்த 1994 ஆம் ஆண்டு விளையாடினார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்கள் மேற்பட்ட ரன்களும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.

இந்த நிலையில் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 ம் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். உங்கள் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நீங்கள் திரும்பி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

14 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

17 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

18 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

1 hour ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

1 hour ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago