நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன்- சரத்குமார்

நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில்,கோடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார். கோடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment