“முதல்வர் பதிலளிப்பதை கண்டு நான் அசந்துள்ளேன் ” துரைமுருகன் புகழாரம்!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை கண்டு நானே பலமுறை அசந்து போய் உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்ததும் குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் அவையில் கேள்வி நேரம் குறைக்க வேண்டும் என்று நன் கேட்டேன், நீங்கள் முடியாது என்று கூறினீர். ஆனால் , அந்த நீண்ட நேர கேள்வியின் பொது முதல்வரின் சம்பத்தப்பட்ட துறைகளுக்கு மட்டும் பதில் கூற நேரமில்லையா என்று கேட்டுள்ளார். இதற்க்கு முந்தைய காலங்களில் , முதல்வரின் துறைகளாக இருக்கும் காவல்துறை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் ஆனால், தற்போது அவ்வாறு இல்லை என்று கோரியுள்ளார்.

மேலும், முதல்வர் பல கேள்விகளுக்கு  சாமர்த்தியமாக பதில் அளிப்பவர் , அவர் “பதில் அளிப்பதைக் கண்டு நானே பலமுறை அசந்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். எனவே, நாளை முதல் முதல்வரும் அவருடைய துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.