நான் ரோஹித் சர்மா ரசிகன்…கேஎல் ராகுல் ஓபன் டாக்.!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல்ராகுல் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா..? அல்லது நடைபெறாமல் இருக்குமா.? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் ஒரு வீரர் கேஎல்ராகுல் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியிருப்பது, ரோஹித் சர்மா அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான் என்றும் கூறியுள்ளார். ,

நான் இப்போது அவருடன் சில ஆண்டுகளாக விளையாடியுள்ளேன், ஆனால் அவர் அணியில் உள்ள ஒருவர், நான் எப்படிச் சொல்வேன், சில கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து மந்தமானதைப் போல, நான் அவரை பார்த்திருக்கிறேன். என்றும் கூறியுள்ளார்.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.