மகிழ்ச்சியுடன் தான் அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது -ஓ.பி.எஸ்!

மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் எனும் போட்டிகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆன கேபி முனுசாமி அவர்கள் விரைவில் அதிமுகவின் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிமுக சார்பில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன் நிறுத்தப்படுவார்கள் என பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளார். இந்நிலையில் மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன் எனவும், அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்னும் எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது எனவும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal