‘பிரதமர் மோடியை கொல்ல போகிறேன்’- கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

பிரதமர் மோடியை கொல்ல போவதாக கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் இளைஞரொருவர் அழைப்பு விடுத்து, பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின் சற்று நேரத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்து பின் இணைப்பை துண்டித்தார். இதனை எடுத்து, அவரது தொலைபேசி என்னை வைத்து, வட கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் இருந்து அந்த நபர் பேசியது தெரியவந்தது.  அந்த நபர் சல்மான் என்ற அர்மான் என்ற 22 வயது இளைஞர் ஆவார்.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் தொலைபேசியில் பேசி நபரின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்தனர்.  இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனை பெற்றுள்ளார்.

சல்மான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். தொலைபேசியில் பேசுவதற்கு முன் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து போதை மருந்து சாப்பிட்ட பின் தனது தந்தையுடன் தகராறு செய்துவிட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து மாநிலம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் வெளியில் இருக்க விரும்பவில்லை. சிறைக்கு செல்ல விரும்புகிறேன். அதனால் தான் இவ்வாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் விரைவில் உளவுப் பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.