நான் வருகிறேன் ! திமுக தயாரா ? – ஆ.ராசா வின் கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதில் !

சேலத்தில் டிசம்பர் 1 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2ஜி ஊழலில் ரூபாய் 1.76 லட்சம் கோடி யை கொள்ளையடித்தது திமுகதான் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த திமுக-வின் ஆ.ராசா, 2ஜி விவகாரம் குறித்து கோட்டையில் வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்,முதலமைச்சர் அதற்கு தயாரா ? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் ஆ.ராசா வின்  கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2ஜி விவகாரம்  குறித்து விவாதிக்க ஆ.ராசா, அழைத்தால் ஏன் முதலமைச்சர் தான் வரவேண்டுமா நான் வருகிறேன் திமுக அதற்கு தயாரா ? என்று கூறியுள்ளார்.

author avatar
Castro Murugan