தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது-அமைச்சர் சி.வி.சண்முகம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அப்பொழுது  அவர் கூறுகையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது .ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

திட்டத்தை சட்ட ரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.