வெளிநாட்டில் அடிமையாக இருக்கும் இரு பெண்கள்!மீட்டுத்தருமாறு கணவர்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திருமூர்த்தி மற்றும் செல்வம் என்ற நண்பர்கள் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் நண்பர்கள் என்பதால் பக்கத்து பக்கத்து வீடுகளில் தங்கி இருந்துள்ளன.

திருமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி,செல்வத்தின் மனைவி வசந்தாமணி.இந்நிலையில் வசந்த ராஜ் என்ற தரகர் ஒருவர் இருவரின் மனைவிக்கும் வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக அறிமுகமாகியுள்ளார்.

அவரின் பேச்சை நம்பி இருவரின் மனைவியும் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த மாதம் சென்றுள்ளனர்.இதன் அடிப்படையில் ஒரு மாதம் ஆகியும் சம்பளம் முறையாக தராமல் வீட்டின் உரிமையாளர் கொடுமைப்படுத்துவதாக தொலைபேசி மூலம் குவைத் நாட்டில் இருந்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு வாரமாக அவர்களிடம் இருந்து எந்தவிதமான தொடர்பும் இல்லாததாலும் தரகரும் முறையான பதிலை தராததாலும் திருமூர்த்தியும் செல்வமும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் வெளிநாட்டில் கொத்தடிமையாக இருக்கும் தங்கள் இருவரின் மனைவியையும் மீட்டு தருமாறு மனு அளித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.