உடலுறவின் போது மனைவியின் தொண்டையை வெட்டி கொலை செய்த கணவர்

கடந்த ஆண்டு நடந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ் கொலை வழக்கில் சிலிர்க்கும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ்  என்பவர் ஒரு ஒப்பனை கலைஞர் ஆவார்.இவர் கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது ,அவரது கணவர் மார்செலோ அகஸ்டோ டி சௌசா அராஜோ (Marcelo Augusto de Sousa Araujo) அவரின் தொண்டையை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அவரது கணவர் ஒரு தற்கொலை கடிதத்தை உருவாக்க முன்வந்ததாகவும் , இது ஃபிரான்சின் எழுதியது போல் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.G1 Globo News அறிக்கையின்படி ,இந்த கடிதம்  சில நாட்களுக்கு முன்பாகத்தான் வந்தது என்று டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தெரிவித்தது.

ஃபிரான்சின் எழுதியதாக கூறப்பட்ட  கடிதத்தில் , “எங்கள் குடும்பம் எங்கள் வாழ்க்கையில் மிகவும் தலையிடுவதால் நாங்கள் சோர்வாக இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நேசிக்கிறோம் . நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் ஒன்றாக வெளியேற முடிவு செய்துள்ளோம். நாங்கள் விரும்பினோம் எங்களை ஆதரிப்பதற்காக ஒரு குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அது இருபுறமும் நரகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராஜோ தனது மனைவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி அன்று  ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில், “ஹாய் தோழர்களே, எனது திருமணத்தைப் பற்றி நான் செய்யவேண்டியது இல்லை. எ  எனது குடும்பத்தினரும் எங்கள் தொழிற்சங்கத்திற்கு எதிராக ஏற்படுத்திய அனைத்து மன அழுத்தங்களையும் என்னால் எடுக்க முடியாது என்று உங்களுக்கு வருந்துகிறேன். ஆனால் திருமணம் செய்துகொள்வது பற்றி   ஏதாவது உணர்கிறோம். ஒருவேளை நாங்கள் எப்படிச் செய்வது என்ற உண்மையை எப்படி விளக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை, நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்பது எங்கள் தொழிற்சங்கத்திற்கு பெரிதும் உதவியது. ஏனென்றால் நாங்கள் அதனுடன் மிகவும் இணைந்திருப்பதால் வேறு யாரும் செய்யாத ஒன்றை உணர்ந்தேன், ஆனால் இன்னும் குடும்பம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது ஒன்றல்ல, ஏனென்றால் நாங்கள் அடுத்ததை விரும்பினோம், நாங்கள் கஷ்டப்படவில்லை, ஆனால் அது ஏற்கனவே முடிந்துவிட்டது. எனக்கும், மாவுக்கும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம், எங்கள் திருமணம் நித்தியமாக இருக்கும்.  கிறிஸ்துமஸ் ஒன்றாக இல்லாமல் அனைத்தும் ஒன்றல்ல என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை  படித்த உறவினர்கள் ஃபிரான்சின் மற்றும் அராஜோவின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் பிரேசிலின் வர்சியா பாலிஸ்டாவில் உள்ள   வீட்டின் கதவை உடைத்தனர்.கதவை உடைத்த பின் , உள்ளே அவர்கள் இறந்த உடலையும், வீடு முழுவதும்  ரத்த கறைபட்டுள்ளதையும்,  காயங்களுடன் அராஜோ இருப்பதையும் கண்டறிந்தனர்.மேலும் அரோஜா தற்கொலைக்கு முயன்றதாகவும் ,பின்னர் அவரது மணிக்கட்டு மற்றும் கழுத்தில் காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரோஜா பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனது 21 வயது மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர் போலீசார்  விசாரணையில் இருந்து வருகிறார்.காவல் நிலையத்தில், டிசம்பர் 22 ஆம் தேதி உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, ​​தனது மனைவியின் தொண்டையை அறுத்ததாக அராஜோ ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி 1 குளோபோவின் அறிக்கையின்படி (G1 Globo’s report), இந்த ஜோடி கிறிஸ்துமஸ் இரவு உணவு மற்றும் அவரது கர்ப்பம் பற்றி வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் இரண்டு சிதைவுகள் மற்றும் உடைந்த மணிக்கட்டு மற்றும் தலை பகுதி சிதைந்தும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ஒரு நீதிபதி அராஜோவை நடுவர் மன்றத்தால் விசாரிக்க உத்தரவிட்டார். டிசம்பர் 30 -ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட முடிவை அவரது பாதுகாப்பு குழு மேல்முறையீடு செய்தது.விசாரணை தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.