மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!

வெவ்வேறு ஜாதியில் திருமணம் செய்ததால், மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்

ஹைதராபாத்தில் உள்ளம் ஹேமந்த் என்பவரும் அவந்தி எனும் பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் திருமணம் முடித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் அடிக்கடி பெண் குடும்பத்தினரால் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது 10 லட்சத்திற்கு கொலைக்கு ஆள் ஒருவரை வைத்து, அவரின் தந்தை தாய் மற்றும் மாமா ஆகியோர் ஹேமந்த்தை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர்.இதன்படி அந்த கொலையாளி ஹேமந்த்தையும் கௌரவக் கொலை செய்துள்ளார் என போலீஸ் துணை ஆணையர் வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹேமந்த்தின் மனைவி கூறுகையில், நானும் ஹேமந்ததும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். அதற்கு என்னுடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் போலீசாரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு இரு புறமும் சமரசமாக தான் இருந்தோம். ஆனால் இவர்கள் இவ்வாறு ஒரு திட்டம் தீட்டுவது எனக்கு இன்று வரையில் தெரியவில்லை. அப்படியே இவர்கள் நான் வேறு ஜாதியில் திருமணம் செய்து இருக்கிறேன் எனும் காரணத்தை கோபமாக வைத்திருந்தாலும் என்னை தானே கொலை செய்திருக்க வேண்டும், ஏன் என் கணவரை கொலை செய்தார்கள்? என கதறியபடி கூறியுள்ளார். மேலும் அவரது தந்தையும் மாமனாரும் தான் இந்த கொலையில் முக்கிய காரணமாக இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள்தான் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் எனவும் அவர் கூறியுள்ளார். மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, ஹேமந்த்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது

author avatar
Rebekal