மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஸ்கூட்ரைவரால் குத்தி கொலை செய்த கணவன் கைது ..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து முன்னதாகவே அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அண்மையில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தனது மனைவியை சந்தித்த யஷ்வந்த் அவரிடம் தகராறு செய்ய  ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவருடன் வந்து விடுவதாக மனைவி கூறியுள்ளார். ஆனால் மனைவி கள்ளக்காதலனுடன் பேசியவாறு இருந்துள்ளார்.

அப்பொழுது கணவன் போதையில் இருந்ததால் இருவரும் தவறான உறவிலும் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற யஷ்வந்த் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கற்களால் தாக்கியதுடன் ஸ்க்ரூட்ரைவராலும்  குத்தியுள்ளார். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரையும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு யஷ்வந்த் ஓடி உள்ளார். ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

author avatar
Rebekal