மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து கோபமடைந்த அவரது பாசக்கார கணவர் விஷ்னோய் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த நாயின் உரிமையாளர் வினித் தனது வளர்ப்பு நாயை சுட்டது அண்டை வீட்டுக்காரர் விஷ்னோய் தான் என்பதை அறிந்து அவர் மீது துவாரகாபுரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் நரேந்திர விஷ்னோய் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…