#சீனாவிற்கு தடை-பிரிட்டனை விட்டு வெளியேற உத்தரவு!

சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும்  உடனடியாக அகற்ற பிரிட்டன் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இருப்பதால் இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.இதனால் சீன நிறுவனம் பிரிட்டனில் இருந்தும் வெளியேறுகிறது என்பதை விட வெளியேற்றப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை என்று பிரிட்டன் வட்டார தகவல்கள் வெளியாகின்றன.

author avatar
kavitha