இன்றைய (03.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ..!

மேஷம் :

இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும்.

ரிஷபம் :

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் உங்கள் இலட்சியத்தை விரைந்து அடைவீர்கள்.உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இன்றைய நாளை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிதுனம் :

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது.இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை பாதிக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவை மூலம் ஆறுதல் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கடகம் :

இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்காது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க கூடாது. சுய முயற்சியை நம்புங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

சிம்மம் :

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானது. வளர்ச்சி காணப்படும் நாள். கஷ்டமான வேலைகளை இன்று எளிதாக முடிப்பீர்கள். உடல் மற்றும் மன தைரியத்துடன் காணப்படுவீர்கள்.

கன்னி :

இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பெரியவர்களின் ஆதரவு பெறுவீர்கள். அதனால் சிறப்பாக உணர்வீர்கள்.

துலாம் :

இன்று சற்று மந்தமாக இருக்கும். இன்று விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்தச் செயலையும் செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் :

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானது அல்ல.இன்று பாதகமான விளைவுகளை தடுக்க யோசித்து முடிவெடுங்கள். இன்று நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.

தனுசு :

இன்று வளர்ச்சி காணப்படும் நாள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் . இன்று தைரியமாக  முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

மகரம் :

இன்று விரும்பும் பலன் கிடைக்க சாத்தியமான நாள் அல்ல. பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். நண்பர்களை சந்திப்பதை தவிர்க்கவும். கடவுளை வழிபடுதல் மூலம்  ஆறுதல் கிடைக்கும்.

கும்பம் :

இன்றைய நாள்  சற்று  மந்தமாக இருக்கும். எந்த செயலையும் தொடங்குமுன் யோசித்து செயல்படவும். இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அதனை கவனமுடன் கையாளவும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம் :

இன்று சாதகமான விளைவுகள் கிடைக்காது. இதனால் குழப்பமான மனநிலை ஏற்படும். உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூற முடியாது. பிறருடன் பேசும்போது கவனம் தேவை.

 

author avatar
murugan