ஏத்தம் பழத்தில மாலை நேர ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் எப்படி செய்வது.?

மாலை நேர ஸ்நாக்ஸாக 5 நிமிடங்களிலேயே ஏத்தம் பழத்தை வச்சு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.அவர்களுக்காக இந்த மாலை வேளையில் ஏத்தம் பழத்தை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • நெய் – 1 மேஜைக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 1 மேஜைக்கரண்டி
  • பாதாம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
  • தேங்காய் -அரை மூடி
  • சர்க்கரை – 3 மேஜைக்கரண்டி
  • ஏலக்காய்த்தூள்- 1/4 மேஜைக்கரண்டி
  • ஏத்தம் பழம் -2
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

சூடான பேனில் 1 மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி அது சூடானதும் சிறுது சிறுதாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் உங்களுக்கு பிடித்த எந்த நட் வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.நன்றாக வதக்கிய 1 நிமிடத்திற்கு பின்னர் அதனை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

அதனையடுத்து அரை மூடி தேங்காயை துருவி வைத்து விட்டு அந்த நெய்யில் தேங்காயின் ஈரப்பதம் போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். இந்த வதக்கிய தேங்காயை பிரிட்ஜில் 2 வாரம் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம் .

அதனையடுத்து ஈரப்பதம் போகும் அளவிற்கு வதக்கிய தேங்காயை பவுல் ஒன்றில் மாற்றி அதில் முன்னதாக வதக்கி வைத்திருந்த முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை இதில் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். அதில் 3 மேஜைக்கரண்டி சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அதில் கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனையடுத்து ரொம்ப பழுத்ததும் இல்லாமல் ரொம்ப காயும் இல்லாமல் உள்ள இரண்டு ஏத்தம் பழங்களை இரண்டு துண்டுகளாக நறுக்கி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அதன் வேக வைத்த பழத்தை சப்பாத்தி மாவு போன்று பிசைய வேண்டும். அதுவும் பழம் சூடாக இருக்கும் போதே பிசைந்தால் தான் மிருதுவாக இருக்கும்.

பழத்தின் நடுவிலுள்ள நாரை நீக்கி விட்டு சப்பாத்தி மாவு போன்று சிறுது எண்ணெய் ஊற்றி பிசைந்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். அதன் பின் பிசைந்து வைத்துள்ள பழத்தை உருண்டையாக உருட்டி அந்த உருண்டையின் நடுவில் முன்னதாக கலந்து வைத்துள்ள தேங்காய் துருவலை கொஞ்சமாக வைத்து மூடி வேண்டும். அதன் பின் அதனை நன்றாக உருட்டி விட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். உருண்டையை மெதுவாக கரண்டியால் எடுத்து போட வேண்டும். பழத்தின் இருபுறமும் பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து பொரித்து எடுக்க வேண்டும். 5 நிமிஷத்தில மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

7 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

9 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

11 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

12 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

12 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

12 hours ago