உப்புமாவில் சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

பிரட்-ஐ பயன்படுத்தி சுவையான மாலைநேர ஸ்நாக்ஸான   உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உப்புமாவில் பல வகைகள் உண்டு. சிலருக்கு தினமும் சாப்பிட்டு வெறுப்பு கூட இருக்கும். ஆனால் இந்த உப்புமாவை கொண்டு எப்படி சூடான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது என்று தான் இன்று பார்க்க உள்ளோம். அதாவது சுவையான பிரட் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் ஸ்லைஸ் -10
பச்சை பட்டாணி – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
பீன்ஸ் – 6
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சம் பழம் – 1/2 பீஸ்
இஞ்சி – 1
கடுகு – 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைக்க வேண்டும். அதன் பின் பச்சை பட்டாணியை உரித்து, அதனை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்துள்ள பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

பச்சை பட்டாணி 95 சதவீதம் வெந்த பின் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி, பட்டாணியை தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.அதன் பின் எலுமிச்சம் பழத்திலுள்ள சாறை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து பிரட்டுகளை மைக்ரோவேவ் ஓவனிலோ அல்லது பேன் பயன்படுத்தியோ சுமார் 3 நிமிடம் வரை சூடாக்கிய பின் அந்த பிரட்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அதன் பின் மிதமான சூட்டில் அடுப்பில் பேனை வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெயையும், ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யையும் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.எண்ணெய் சூடாகிய பின் அதில் கடுகை போட்டு விட்டு, அது வெடித்ததும் அதில் சீரகத்தை போட்டு வறுக்கவும்.

அடுத்த அரை நிமிடத்தில் அதில் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.வெங்காயம் கண்ணாடி பதம் ஆன பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் கருவேப்பிலையை போட்டு வதக்கவும்.

இஞ்சியின் பச்சை வாசம் போன பின் அதில் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வேக வைத்து எடுத்து தனியாக வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு நன்றாக கலந்து வேக வைக்கவும்.
அதன் பின் சுமார் 10 நிமிடத்திற்குப் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வேக வைக்கவும்.

அதன் பின் சுமார் 2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் தேவைக்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து வேக வைக்கவும்.
அதனை வேக வைத்த ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.அதன் பின் தக்காளியை நன்றாக வெந்த பின்
அதில் நாம் ஏற்கனவே பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி கலக்கவும்.

பின்பு அந்த மசாலா கலவையில் toast செய்து துண்டாக்கி வைத்துள்ள பிரட்டு துண்டுகளை போட்டு மசாலாவோடு சேருமாறு கிளறி விட்டு வேக வைக்கவும்.
வேக விட்ட ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.தற்போது சூடான பிரட் உப்புமா ரெடி.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

4 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

6 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

8 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

9 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

9 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

9 hours ago