அரிசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம்.அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.அதனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள்.அந்த வகையில் இன்று அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

  • அரசி மாவு – 200 கிராம் (1 கப்)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீரை சேர்த்து விட்டு ,அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெயை சேர்க்க வேண்டும்.

அதன் பின் தண்ணீர் நன்றாக சூடாகிய பின்னர் அதில் 1 கப் அரிசி மாவை போட்டு நன்றாக கிளறி விடவும் .அப்போது மிதமான சூட்டில் அடுப்பு இருக்க வேண்டும் .அதன் பின் கிளறி விட்ட அரசி மாவை அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடி கொண்டு மூடி வைக்கவும்

சுமார் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அரசி மாவை ஒரு பவுலில் மாற்றி , இடியாப்பத்திற்கான மாவு பதத்தில் வரும் அளவிற்கு பிசைந்து வைக்கவும்.அதன் பின் அதனை மூடி வைத்து மூடி வைக்கவும்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மாவை அழுத்தி பிசைய வேண்டும்.கையில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெயை தடவி பிசைய வேண்டும்.அதன் பின் மாவை சப்பாத்தி போன்று உருட்டி அதன் ஓரங்களை வெட்டி மூன்று பாகங்களாக பிரித்து சிறுது சிறிதாக முக்கோண வடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.

அதன் பின் சூடான எண்ணெயில் வெட்டி வைத்த மாவை போட்டு கொஞ்சம் நிறம் மாறியதும் பொரித்து எடுக்கவும்.பொரித்த சிப்ஸை தனி பாத்திரத்தில் மாற்றி அதில் 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்தால் மொறு மொறுவான சிப்ஸ் ரெடி .