இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 50,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவால் 8,363,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 123,354 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 77,10,630 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,28,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை விரைவில் மாற மக்கள் அனைவரும் அரசு சொல்வது போல வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

author avatar
Rebekal