கொரோனா பரவலுக்கு மத்தியில் தாய் பால் தானம் செய்வது எவ்வளவு முக்கியம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்வது குறித்து மிக முக்கியமானது மற்றும் அவசியமானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல தாய்மார்கள் உயிர் இழந்து விடுகின்றனர். அதனால் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு ஏங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த தாயின் குழந்தைக்கு பிறர் பால் தானம் செய்வது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை உள்ள நேரங்களில் தாய்ப்பால் குடிப்பது மிக அவசியம் என கூறியுள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, தாயை இழந்த குழந்தைகளுக்கு அல்லது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் ஹெல்ப்லைன் நம்பர் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக பிறரிடம் கேட்டு அந்த குழந்தைகளுக்கு பால் தானம் செய்வதற்கு தாங்கள் உதவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர், பிளாஸ்மா மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கான ஆகியவை கிடைக்கும் இடங்கள் குறித்தும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக தாய்ப்பால் கொடுக்கக் கூடிய நன்கொடையாளர்கள் குறித்த வேண்டுகோளும் தற்போது தங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், இது குறித்த தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தாய்மார்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு நல்லது கிடையாது எனவும், கொரோனாவால் தாய் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொரோனா பரவும் எனவும் சில வதந்திகள் பரவுவதாகவும், அது உண்மையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தானம் செய்யுமாறு தங்களிடம் கேட்டதாகவும், கொரோணா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைக்கு தாங்கள் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அது போல இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் போல மற்ற பிள்ளைகளையும் நினைத்து தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், உங்களின் இந்த சிறு உதவி குழந்தைகளின் உயிரை பாதுகாக்கும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

7 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

9 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

10 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

10 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

10 hours ago