#IPL2021: “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் வீட்டிலே இருக்கின்றனர்; இல்லையென்றால்..”- பிசிசிஐ!

ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர்.

அந்தவகையில், கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோர் வெளியேறினார்கள். இதனால் அணி நிர்வாகம் திணறி வருகின்றது. இன்று இரண்டு அம்பயர்கள் தொடரில் இருந்து வெளியேறினார்கள்.

வீரர்கள், ஊழியர்கள் என பலரும் கொரோனா அச்சம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிவரும் நிலையில், ஐபிஎல் தொடரை ரத்து செய்யவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், Reuters ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர்,

“ஐபிஎல் தொடரை நடத்துவது, இப்பொழுது மிகவும் முக்கியமானது. பல எதிர்ப்புகள் வந்தாலும், பொருளாதாரத்திற்கு கணிசமான பணத்தை உருவாக்குகிறது இந்த ஐபிஎல் லீக் தொடர். அதை இந்த சூழலிலிருந்தும் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரை நிறுத்துவைப்பது, எவ்வாறு உதவும்?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

59 seconds ago

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

35 mins ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

49 mins ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

1 hour ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

2 hours ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

2 hours ago