சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா? 

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை.

தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் பால் குடிக்கலாமா? என்பது பற்றியும் பார்ப்போம்.

சளி எவ்வாறு உருவாகிறது?

மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் கோழை போன்ற ஒரு படலம் உள்ளது. இது  ‘மியூசின்’ எனும் திரவத்தை சுரக்கிறது. இதனை பார்ப்பதற்கு பளிங்கு போன்று இருக்கும். இது பிசின் போல ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. இது நமது சுவாச பாதை வறண்டு விடாமல் இருக்க உதவுகிறது. காற்றின் மூலம் வரும் தூசு மற்றும் கிருமிகள் இதில் ஒட்டிக் கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது.  இதனால், நாம் இயல்பாக சுவாசிப்பதற்கு உதவுகிறது.

அதே சமயம், காற்றில் அதிக அளவு தூசு மற்றும் கிருமிகள் கலந்து  வந்தால், இந்த மியூசின் சுரப்பு அதிகமாக காணப்படும். இந்த மியூசினுக்கு கிருமிகளுடன் போராடக் கூடிய குணம் கொண்டது. இது போராடும் போது பல கிருமிகள் இறக்கும். அதே சமயம் பழைய கோழை படலமும் அழிந்து விடும். இதனால், இறந்து போன கிருமிகள், அழிந்து போன கோழைப்படலச் செல்கள் அனைத்தும், மியூசின் படலத்தில் கலந்து சளியாக உருவாகிறது.

இந்த மியூசின் திரவம் சளியாக மாறியவுடன், பழுப்பாகவோ, மஞ்சளாகாவோ காணப்படுகிறது. இந்த சளியின் நிறம் கோழை படலத்தை பாதிக்கும் கிருமியை பொருத்தும் நிற மாற்றம் ஏற்படுகிறது. இதில், இந்த கிருமிகளின் பாதிப்பு மூக்கில் இருந்தால், மூக்கு சளி என்றும், தொண்டையில் இருந்தால் தொண்டை சளி என்றும், நுரையீரலில் இருந்தால் நெஞ்சு சளி என்றும் நாம் கூறுவதுண்டு.

பால் குடிக்கலாமா?

ஒரு சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்னை இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பால் குடித்ததும், வயிற்று உப்பிசம், வயிற்று வலி, இரைச்சல், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும்,மூக்கு  ஒழுகல், தும்மல், இருமல், சளி போன்ற பிரச்னையும் ஏற்படும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பால் குடிப்பதை தவிர்க்கலாம்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

3 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

12 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

15 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

15 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

15 hours ago