தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வெப்பநிலை உயரும் காரணத்தால் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4முதல் 6 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பநிலையாக உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.