ஒசூர் ஆணவக்கொலை…!தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது …!

ஒசூர் ஆணவக்கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் மாண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் ஒசூரை சேர்ந்த  காதல் திருமணம் செய்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
சூடுகொண்டப்பள்ளியில் வேறு வேறு சமூகத்தை சேர்ந்த நந்திஷ்-சுவாதி காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். காதலர்களை கொன்று விட்டு கை,கால்களை கட்டி காவிரியில் வீசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சூடுகொண்டபள்ளியை சேர்ந்த நந்திஷ், அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து திருமணம் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகிறோம் என்று கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பட்டியல் இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்து இருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில்  ஒசூர் ஆணவக்கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நந்தீஷ், சுவாதி தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் பெரியப்பா அஸ்வந்த் ,சித்தப்பா வெங்கட்ராஜ்,லக்ஷ்மன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment