#Breaking:திமுக எம்.எல்.ஏவின் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு…!

ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் பெங்களூரு அருகே விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நள்ளிரவில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,பெங்களூரு கோரமங்கலா அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் கருணா சாகரும்,அவருடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.