டெல்லியில் சட்ட விரோதமாக இயங்கிய பார்கள்.! 103 பேர் அதிரடி கைது.!

டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்களை நடத்தியது சம்பந்தமாக சிறப்பு காவல்துறையினர் அதிரடியாக 103 பேரை கைது செய்தனர்.

டெல்லியில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக செயல்படும் ஹூக்கா (புகையிலை) பார்கள் (hookah bar) பற்றிய செய்திகள் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்தது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து, ரோஹிணி மாவட்டத்தில் செக்டர் 8இல் ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 ஹுக்கா பார்கள்  கண்டுபிடிக்கப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டன இது தொடர்பாக பார் ஓனர்கள், மேலாளர்கள் உட்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.

அங்கிருந்து மதுபானங்கள், ஹுக்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.