உள்துறை அமைச்சர் மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைக்கிறார் – ராகுல் காந்தி

உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார்.

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை, நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மிசோரம்- அசாம் இடையிலான எல்லை பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது என்று விமர்சித்து  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.